உலக அக்குபஞ்சர் தின விழா .!

தமிழ்நாடு

உலக அக்குபஞ்சர் தின விழா .!

உலக அக்குபஞ்சர் தின விழா

தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் மற்றும் கேர் & க்யூர் அகாடமி ஆப் கிளாசிகல் அக்குபஞ்சர் இணைத்து நடத்திய உலக அக்குபஞ்சர் தினவிழா இன்று காலை  புதுச்சேரியில் உள்ள ஜெயராம் ஹோட்டலில் நடைபெற்றது.

அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தேசிய குழு உறுப்பினர், தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் தலைவர், கலியுக சித்தர் டாக்டர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன் அவர்கள் தலைமையில் முன்னாள் சுகாதாரக் குழு தலைவர் டாக்டர் தமிழரசி சுப்பையா மற்றும் புதுச்சேரி அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் முனிசாமி  ஆகியோர்  முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் கேர் & க்யூர் முதல்வர் டாக்டர் V. மகேஷ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக  கலந்து கொண்ட வேளாண்துறை அமைச்சர் தேனி C. ஜெயகுமார் அவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் KSP. ரமேஷ் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். தொடர்ந்து மருத்துவர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ், புதுச்சேரி யூனியன் தலைவர் தோழர் எம்.பி.மதிமகாராஜா, தேசிய குழு உறுப்பினர் ஐயா எம்.டி.இராமலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

நிழ்வின் இறுதியில்,  சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் விஜய் கார்த்திக் நன்றியுரை வழங்கினார்.

செய்தியாளர் 

மாருதி மனோ