திருப்புவனம் அஜித் குமார் லாக்அப் மரணம் தொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் அறிக்கை .!

சென்னை

திருப்புவனம் அஜித் குமார் லாக்அப் மரணம் தொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் அறிக்கை .!

சென்னை: காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட திருப்புவனம் அஜித் குமார் லாக்அப் மரணம் தொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அஜித்குமார் விவகாரம் இந்திய அளவில் டிரெண்டிங்கான நிலையில், முதல்வரும் சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வு கூட்டத்தில் காவல்துறை யினரின் மனிதாபிமானமற்ற நடவடிக்கையை கண்டித்த நிலையில், டிஜிபி அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதனிடையே, அஜித் மரணம் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 5 காவல்துறையினர் பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 5 காவலர்களையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க திருப்புவனம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி.உள்ளிட்ட காவல்துறை உயர் அலுவலர்களுடன் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து முதல்-அமைச்சர் ஆய்வு செய்தார். அதோடு, காணொலிக் காட்சி வாயிலாக மத்திய, மேற்கு மற்றும் தெற்கு மண்டல காவல்துறை தலைவர்களுடனும் ஆய்வு மேற்கொண்டார். இதில், நாடு முழுவதும் டிரெண்டிங்கான சிவகங்கை மாவட்டம் திருபுவணம் கோவிலில் காவலாளி அஜித்குமார் காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்தும் கூட்டத்தில் முதல்வர் விவாதித்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, டிஜிபி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில், 6 போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், த்தகைய சம்பவங்கள் நடைபெறும் போது எவ்வித தயவு தாட்சண்யமும் இன்றி உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் 28.06.2025 அன்று ஒரு வழக்கு குறித்த விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்பவரின் இறப்புத் தொடர்பாக, ஆறு போலீசார் உடனடியாக 28.06.2025 அன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். காவல் நிலைய மரணம் தொடர்பான வழக்குகளில் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் அனைத்தும் முறையாகப் பின்பற்றப்பட்டு உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடைமுறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட, பிரேதப் பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் இன்று இரவு (அதாவது நேற்று) கிடைத்தவுடன் எந்த காலதாமதமும் இன்றி, உடனடியாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கில், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன், இவ்வழக்கை கொலை வழக்காக சட்டப்பிரிவுகளில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டு, . இச்சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, திருப்புவனம் காவல் நிலையத்தில் Bharatiya Nagarik SurakshaSanhita (BNSS) Act ன் பிரிவு எண். 196(2)(a) ன் கீழ், குற்ற எண். 303/2025 ல் வழக்குப்பதிவுசெய்யப்பட்டு, நீதி விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த வருந்தத்தக்க சம்பவத்தில், தமிழ்நாடு அரசின் காவல்துறை நியாயமான, வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற முறையில் செயல்பட்டுள்ளது. கடந்த காலங்களை ஒப்பிடும்போது கடந்த ஐந்து ஆண்டுகளில் காவல் நிலைய மரணங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதோடு, இத்தகைய சம்பவங்கள் நடைபெறும் போது எவ்வித தயவு தாட்சண்யமும் இன்றி உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு காவல்துறை மேற்கொண்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,. அஜித் மரணம் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும் அஜித்குமார் அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அஜித்குமாரின் பிரேதப்பரிசோதனை அறிக்கையில் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 5 காவலர்களையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க திருப்புவனம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.