இலஞ்சி ராமசாமி பிள்ளை பள்ளி ஆசிரியர்கள் அலுவலர்கள் கோடை சுற்றுலா.!
தென்காசி

இலஞ்சி ராமசாமி பிள்ளை பள்ளி ஆசிரியர்கள்
அலுவலர்கள் கோடை சுற்றுலா
தென்காசி மே 3
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை 2024- 2025 ம் கல்வி ஆண்டின் 210 வேலை நாட்கள் என்பது ஏப்ரல் 30 உடன் நிறைவடைந்தது. மாணவர்களுக்கான கற்பித்தல் பணிகள் , தேர்வுகள் , மதிப்பீடு என அனைத்தும் நிறைவடைந்த நிலையில் அனைத்து பள்ளிகளுக்கும் மே - 1 முதல் ஜூன் 1 வரை கோனட விடுமுறை. இக்காலகட்டங்களில் குழந்தைகள் குடும்பத்துடன் உறவினர்களின் இல்லங்களுக்கு சென்று கோடை வெப்பம் தனித்து குதூகலித்து கொண்டாடி புத்துணர்வு பெற்று வருவர்.
இது போல் ஆசிரியர்களும் வரும் கல்வி ஆண்டை எதிர்கொள்ளவும் கடந்த காலங்களில் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்து விடுபடவும் குழுவாக சுற்றுலா சென்று வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் இலஞ்சி இராமசுவாமி பிள்ளைமேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் , அலுவலர்கள் ஐம்பது பேர் பள்ளிச் செயலாளர் ஐ.சி. சண்முக வேலாயுதம் அனுமதியுடன் தலைமை ஆசிரியர் ஆறுமுகம் தலைமையில் அம்பநாடு , அரண்டல் மலைப் பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்கள், அண்ணாச்சி பழ சாகுபடி , தேயிலை , காபி மற்றும் ஆரஞ்சு பழ சாகுபடி முறைகளை கண்டு கழித்து விட்டு பின்னர் தென்மலை சூழல் சுற்றுலா வையும் கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் சங்க செயலர் சுரேஷ் குமார், மற்றும் ஆசிரியர்கள் வெளியப்பன், கணேசன், ஐயப்பன், முருகேசன், அம்பலவாணன், உதவி தலைமை ஆசிரியர் சொர்ண சிதம்பரம் , கற்பகம், உமா, உள்ளிட்டோர் செய்திருந்தனர். இச்சூழல் சுற்றுலா அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சியை தந்தது என ஆசிரியர்கள் கூறினர்.
செய்தியாளர்
AGM கணேசன்