பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா.!
தென்காசி

பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா
தென்காசி செப் 10
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் சார்பாக ஆசிரியர் தின விழா மிக சிறப்பாக
திரவிய நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்
பள்ளியில் வைத்து நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க தலைவர் Ln T.சுரேஷ் தலைமை வகித்தார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள் செல்வன் வரவேற்புரை ஆற்றினார்.
இவ்விழாவில் கண்தான விழிப்புணர்வு குழ நிறுவனர் Ln K.R.P இளங்கோ கண்தான விழிப்புணர்வு பற்றி ஆசிரியர், மாணவர்களுக்கு விளக்க உரையாற்றினார். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத் செயலாளர் Ln பரமசிவன் வாழ்த்துரை வழங்கினார்.
இந்த விழாவில் ஆசிரியர்களுக்கு பொன்னாடை மற்றும் பரிசு பொருட்கள் கொடுத்து கௌரவப்
படுத்தினர்.
பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது,
பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் பொருளாளர் Ln சுப்புராஜ் நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்