கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி சரவணன் நேரில் ஆய்வு .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி சரவணன் நேரில் ஆய்வு. அப்போது மாவட்டத்தில் போஸ்கோ வழங்குகள் அதிகமாக இருப்பதால் போஸ்கோ நிதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினைக் அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சரவணன் அவர்களின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் காவல்துறை, வருவாய்த் துறை, நீதிமன்ற வழக்கறிஞர்கள் சார்ந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் வழக்கறிஞர்களின் குறைகளை கேட்ட நீதிபதி பின்னர் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இதில் பார் கவுன்சில் தலைவர் கோவிந்தராஜுலு கலந்துக் கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு sc/ st நீதிமன்றம், கனிம வளங்களை விசாரிக்கும் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றததிற்கு கூடுதல் கட்டிடம், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உள்ளதால் கூட்டுறவு அங்காடி அமைத்து தர வேண்டும்., தேன்கனிக்கோட்டை பகுதிக்கு கூடுதல் மாவட்ட நீதிபதி அனுமதி வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போஸ்கோ வழக்குகள் அதிகமாக இருப்பதால் கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கூடுதலாக போஸ்கோ நீதி மன்ற கட்டிடம் வேண்டும் என்பதை வலியுறுத்தி மனுவினையும் வழங்கறிஞர்கள் கொடுத்தனர்.
பின்னர் இது குறித்து கூறிய நீதிபதி சரவணன்., பாரம்பரிய நீதிமன்றமான கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் விடுத்த கோரிக்கைகளை பரிசீலனை செய்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
மேலும் பல்வேறு இடங்களில் நீதிமன்ற கட்டிடங்கள் அமைக்க தேவையான வருவாய்த் துறையின் இடங்கள் தேர்வில் வருவாய்த் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறை, வழக்கறிஞர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
உடன் மாவட்ட முதன்மை நீதிபதி லதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை மற்றும் கூடுதல் நீதிபதிகள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ