பல பெண்களை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பணம் நகையை பறித்துக் கொண்டு கல்லூரி மாணவிகளை சீரழித்த பாஜக பிரமுகர் கைது.

பல பெண்களை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பணம் நகையை பறித்துக் கொண்டு கல்லூரி மாணவிகளை சீரழித்த பாஜக பிரமுகர் கைது.
10க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி 50 லட்சம் வரை பணம் பறித்ததாக புகார்.
சென்னை தாம்பரம் அடுத்த செம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் லியாஸ் தமிழரசன்(24), இவர் சேலையூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு சட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார். (அரியர்ஸ் இருப்பதாக கூறப்படுகிறது.
பாஜகவில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட இளைஞரளி செயலாளராகவும் இருந்து வருகிறார்.
கல்லூரி படிக்கும் போது உடன் படிக்கும் பல மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி காதலித்து அவர்களை ஏமாற்றி திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து உல்லாசமாக ஊர் சுற்றி வந்துள்ளார்.
அவ்வப்போது செலவிற்காக பல காரணங்களை சொல்லி, காதலித்த பெண்ணிடம் பணம் நகை என 10 லட்சம் ரூபாய், 20 சவரன் தங்க நகை என வாங்கி உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.
இதே போல் பல பெண்களை குறி வைத்து தனது மன்மத லீலைகளை கட்டவிழ்த்துள்ளார் பாஜகவை சேர்ந்த இளைஞர்,
இதுவரை 10க்கும் மேற்பட்ட மாணவிகளை சீரழித்த இவர் அவர்களிடமிருந்து 50 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
நேற்று ஒரு பெண்ணை அச்சரபாக்கத்தில் வைத்து மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னை திருமணம் செய்வதாக காதலித்து பணம் நகைகளை வாங்கி ஏமாற்றியதாக இவரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில் பெண்களை காதலித்து ஏமாற்றி வாங்கிய பணம் நகைகளை வைத்து சகோதரியின் திருமணத்தை செய்ததாகவும், நகைகளை விற்று கார் வாங்கியதும் தெரியவந்தது.
S S K