ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைத்திட வேண்டி ஆர்ப்பாட்டம். !

திருப்பத்தூர்

ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைத்திட வேண்டும் என ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில்  ஆர்ப்பாட்டம்.!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் முறையான காலமுறை ஊதியம் பெற்றுவரும் ஊராட்சி செயலாளர்களுக்கு ஒய்வூதியத் திட்டத்தில் இணைக்க வேண்டும், பதிவறை எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை ஊராட்சி செயலாளர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. 


இதில் மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட பொருளாளர் பாபு, கந்திலி ஒன்றிய செயலாளர் ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருணாசலம் மற்றும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க நிர்வாகிகள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

ந.வெங்கடேசன்