மகளிர் தொகை 2000 பெறலாம், உங்களுடன் ஸ்டாலின் முகாம். !
தமிழ்நாடு அரசு

மகளிர் உரிமை திட்டத்தில் 1000 ரூபாய் மட்டுமல்ல 2000 ரூபாய் உதவித்தொகை திட்டத்திற்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு சார்பில் பல்வேறு மக்கள் நில திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசின் சேவைகளை மக்களுக்கு விரைவாகவும் எளிதாகவும் கொண்டு சேர்க்கும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன, இதில் 46 வகையான அரசு சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.
இந்த முகாம்கள் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் நடைபெறுகின்றன. இந்த முகாமில் ரேஷன் கார்டு விண்ணப்பம், மகளிர் உரிமை தொகையாக ஆயிரம் ரூபாய் பெற விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறவும் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ் நாடு முதலமைச்சர மு.க.ஸ்டாலின் மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்களில். தங்கள் இரண்டு பெற்றோரையும் இழந்து தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் குழந்தைகள் வளர்ந்து வருவதை அறிந்து,
இக்குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், அவர்களது பள்ளிப் படிப்பு வரை இடைநிற்றல் இன்றி அவர்கள் கல்வியைத் தொடர, 18 வயது வரை மாதம் 2,000/ ரூபாய் உதவித்தொகை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பள்ளிப்படிப்பு முடித்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்.
இந்த அறிவிப்பிற்கிணங்க, இரண்டு பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் இறந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கு, அவர்களின் 18 வயது வரையிலான மாதாந்திர உதவித்தொகை "அன்பு கரங்கள்" நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் தமிழ் நாடு அரசால் வழங்கப்படும்.
இச்சீரிய திட்டத்தின் கீழ் பயன்பெற கீழ்க்கண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்:
1. ஆதரவற்ற குழந்தைகள்(பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள்).
2 கைவிடப்பட்ட குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் குழந்தையை கைவிட்டுச் சென்று இருப்பின்)
3. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள்( பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் மாற்றுத்திறன் தன்மை (Physically/mentally challenged) கொண்டவராக இருந்தால்)
4. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் சிறையில் இருந்தால்)
5. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வந்தால்)
கீழ்க்காணும் ஆவணங்களுடன், "அன்பு கரங்கள்* நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன் பெற அவரவர் பகுதிகளில் நடைபெறும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் அல்லது மாவட்ட ஆட்சியர்/ மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோரிடம் விண்ணப்பிக்கலாம்.
1. குடும்ப அட்டையின் நகல்
2. குழந்தையின் ஆதார் அட்டையின் நகல்
3. குழந்தையின் வயது சான்று நகல் (பிறப்புச்சான்றிதழ்/கல்வி மாற்றுச் சான்றிதழ்/ மதிப்பபண் சான்றிதழ்)
குழந்தையின்வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல்