ஒன்றிய இணையமைச்சர் வீட்டு பொங்கல் விழாவில் பிரதமர் மோடி, நடிகர்கள் சிவ கார்த்திகேயன், ரவி ஆகியோர் பங்கேற்று கொண்டாடினர்.!

பொங்கல்

ஒன்றிய இணையமைச்சர் வீட்டு  பொங்கல் விழாவில் பிரதமர் மோடி, நடிகர்கள் சிவ கார்த்திகேயன், ரவி ஆகியோர் பங்கேற்று கொண்டாடினர்.!

டெல்லியில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத் துறையின் இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆண்டுதோறும் தனது டெல்லி இல்லத்தில் தமிழர்களின் பாரம்பரியப்படி பொங்கல் விழா நடத்தி வருகிறார்.

ஒரே பாரதம் உன்னத பாரதம்" என்ற நோக்கத்தை முன்வைத்து ஏற்பாடு செய்யப்படும் இந்த விழாவில், முக்கிய அரசியல் தலைவர்கள், நீதிபதிகள் மற்றும் மாநில பிரதிநிதிகள் கலந்துகொள்வது வழக்கம்.

எல். முருகன் வீட்டு பொங்கல் விழா

அந்த வகையில் இந்த ஆண்டு, பொங்கல் நாளையொட்டி (ஜனவரி 15), எல். முருகன் இல்லத்தில் மண்பானை, கரும்பு, மஞ்சள், வாழை, தோரணங்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளது.

திரையரங்குகள் மற்றும் வெளிப்புற வளாகங்களில் கிராமிய மற்றும் தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. விழாவில் பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டு, விவசாயிகளின் உழைப்பையும் மதிப்பதற்கான நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி, வேட்டி-சட்டை அணிந்து, மண்பானையில் பொங்கல் வைத்தார். பின்னர் பசுக்காளுக்கு உணவு அளித்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்' எனக் கூறி தனது பேச்சை தொடங்கினார். சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் தமிழர்களின் விழா தான் பொங்கல் பண்டிகை. வேளாண் குடியினர் அறுவடையை கொண்டாடும் பண்டிகை பொங்கல். பொங்கல் பண்டிகையை நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டு வருகிறது என்று பிரதமர் கூறினார்.

தமிழில் வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி

தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரியத்தையும், தேசிய ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தி, விழாவில் உரையாற்றினார். மேலும்விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த மத்திய அரசு தொடர்ந்து உழைத்து வருகிறது நமது பூமி நலமுடன் இருக்க வேண்டும் அதே நேரத்தில் மறுபடியும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று கூறினர் தொடர்ந்து பேசியவர் தனது இறுதி உரையில் வாழ்க தமிழ் வளர்க பாரதம் என கூறி தனது பேச்சை நிறைவு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில பிரதிநிதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். தமிழர்களின் வீரக் கலைகளான சிலம்பாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் போன்ற நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டது. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் மற்றும் நடன அமைப்பாளர் கலா மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் அவரது மனைவி ஆர்த்தி , நடிகர் ரவி ஆகியோர் கலை நிகழ்ச்சிகளை வடிவமைத்தனர்.

இதற்காக நீதிபதிகள், முன்னாள் தலைவர்கள் மற்றும் பல்வேறு துறை வல்லுனர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதில், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆர். மகாதேவன், இந்திய அட்டார்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, முன்னாள் தலைவர் அண்ணாமலை, முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன், நடிகர் குஷ்பு மற்றும் சரத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழா பொதுமக்களுக்கு தமிழர் பாரம்பரிய உணர்வுகளை அனுபவிக்கும் வாய்ப்பையும், தேசிய தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் நேரடியாக கலந்துரையாடும் வாய்ப்பையும் வழங்கியது.

மொத்தத்தில், எல். முருகன் வீட்டு பொங்கல் விழா தமிழர் பண்பாட்டையும், நாட்டின் ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தும் மிகப்பெரிய நிகழ்வாக, தேசிய அளவில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.