பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அத்தியாவசிய பொருட்களை வழங்கிய அமைச்சர்.!
Fengal cyclone visited minister

"ஃபெஞ்சல்" புயல் காரணமாக பெய்த கனமழையால், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி, காணை ஒன்றியம், கல்யாணம் பூண்டி அரசு உயர்நிலை பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான மருத்துவ முகாம் மற்றும் தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்தார் போக்குவரத்து துறை அமைச்சர் ச.சி. சிவசங்கர்.
இந்நிகழ்வில் உடன் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா , அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் பெஞ்சல் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் அமைச்சர் நேரில் பார்வையிட்டு மக்களுக்கு தேவையான பொருட்களை வழங்கினார்.
அமைச்சர் சா.சி. சிவசங்கர்