மக்கள் குறைதீர் மனுநாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.!
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி இ.ஆ.ப. தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு உத்தரவின் படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும்,பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் திங்கள்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது.
இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 284 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இன்றையதினம், புதியதாக பதிவு செய்யப்பட்ட ஊத்துப்பாறை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு, திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில் ரூ.1.25 இலட்சம் மதிப்பிலான கேன், பால் அளவை கருவிகள், பால் பரிசோதனை கருவிகள் மற்றும் பதிவேடுகள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு தையல் இயந்திரம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயசித்ரகலா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோட்டைக்குமார், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கங்காதேவி, துணை ஆட்சியர் (பயிற்சி) ராஜேஸ்வரிசுவி, திண்டுக்கல் ஆவின் பொது மேலாளர் வாணீஸ்வரி, துணைப்பதிவாளர் (பால்வளம்) பவனந்தி, உதவிப் பொதுமேலாளர் பாபு, மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
அழகர் சாமி