மல்லிப்பட்டினத்தில் மாட்டு பொங்கலை ஒட்டி மீன் விற்பனை அமோகம்.!
மல்லிப்பட்டினம்

மல்லிப்பட்டினத்தில் மாட்டு பொங்கலை ஒட்டி மீன் விற்பனை அமோகம்.!
மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆடு, கோழி இறைச்சிகளை வாங்கி சென்றனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி 6 நாட்கள் தொடர் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வெளியே பணி நிமித்தமாக வசித்து வந்த லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து பொங்கல் பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொங்கல் திருநாளில் சாமியை வழிபடுவதால் பெரும்பாலான இடங்களில் இறைச்சி உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளே தயாரிக்கப்பட்டது.
மாட்டுப்பொங்கல்(கரி நாள்) என்பதால் அசைவங்களை படையல் செய்வது வழக்கம்.அதனால் அதிகாலை 3 மணி முதலே பொதுமக்கள் மல்லிப்பட்டினம்,சேதுபாவாசத்திரம், அதிராம்பட்டினம், கொள்ளுக்காடு ஆகிய பகுதிகளில் மீன்களை வாங்க குவிந்தனர்.
வௌவால் மீன் கிலோ ரூபாய் 1200 க்கும், வஞ்சிரம் கிலோ 800 ரூபாய்க்கும், இறால், நண்டு ஆகியவை 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.விலை வழக்கத்தை விட சற்று அதிகமாக இருந்த போதிலும் மக்கள் போட்டி போட்டு மீன்களை வாங்கிச் சென்றனர்.
அசாருதீன்