அதிநவீன தொழில்நுட்பத்துடன் இணையாக  பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம்.!

ராணிப்பேட்டை

அதிநவீன தொழில்நுட்பத்துடன் இணையாக  பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம்.!

ராணிப்பேட்டையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் இணையாக  பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் சார்பாக நடத்தும் 6-ஆம் ஆண்டு இலவச மல்டி பெசிலிட்டி மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமிற்கு நகர மன்ற தலைவர் சுஜாதாவினோத் தலைமையில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.

இதில் வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் செவிலியர்கள் மூலமாக முகாமிற்கு வருகை தந்த பொதுமக்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை முறையில் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது மேலும் முகாமில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பொதுமக்கள் வருகை தந்து அட்டை மூலம் பதிவு செய்யப்பட்டு மருத்துவரை அணுகி அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய எக்கோ கார்டியாக் டாப்ளர் ஸ்கேன் முறையில் இருதயம் சம்பந்தப்பட்ட  பிரச்சனைகள் சர்க்கரை நோய் பரிசோதனை பல் பரிசோதனை ரத்த அழுத்தம் மகப்பேறு மருத்துவம் அதிநவீன கண் சிகிச்சை பரிசோதனை காது மூக்கு தொண்டை குழந்தைகள் நலம் உள்ளிட்ட பல்வேறு பல்வேறு சிகிச்சை முறைகளை இலவசமாக மருத்துவ மூலமாக செய்யப்பட்டது தொடர்ந்து முகாமில் இதயத்துடிப்பு இசிஜி  கருவி, மூச்சுத்திணறல், உடல் எடை அதிகரிக்காமல் இருத்தல் உள்ளிட்ட எண்ணற்ற நோய்களுக்கான  சிகிச்சைகள் இங்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச மருத்துவ முகாம் செயல்பட்டு வருகிறது முகாமில் மேலாளர் சீனிவாசன், HR ராஜேஷ், ராஜேந்திரபிரசாத், பாஸ்கர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர்

அருள் அரசன்