படூரில் வீசிய பலத்த காற்றின் காரணமாக இராட்சத விளம்பர பேனர் கம்பி விழுந்து கார் சேதம், மின் இணைப்பு துண்டிப்பு. .!
சென்னை

படூரில் வீசிய பலத்த காற்றின் காரணமாக இராட்சத விளம்பர பேனர் கம்பி விழுந்து கார் சேதம், மின் இணைப்பு துண்டிப்பு.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அடுத்த படூரில் நேற்று இரவு அடித்த பலத்த காற்று மழையின் காரணமாக சட்டவிரோதமாக உரிய அனுமதியின்றி சாலையோரம் போடப்பட்ட இராட்சத விளம்பர பேனர் அமைக்கும் இரும்பு தூணில் இருந்து ஒரு பகுதி இரும்புக் கம்பி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது, இதில் கீழே இருந்த கார் சேதம், மற்றும் வீட்டின் மேற்கூரையின் மீதும் விழுந்ததால் தகர ஷீட் சேதமானது, மின் கம்பி மீது இரும்பு கம்பியின் ஒரு பகுதி விழுந்து தொங்கியதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு 5 மணி நேரத்திற்கு மேலாக மின் இணைப்பு இல்லாமல் பொதுமக்கள் தவித்தனர்.
பின்னர் பெரிய கிரேன் வரவழைக்கப்பட்டு உடைந்து விழுந்த இரும்புக் கம்பிகள் அகற்றப்பட்டு, மின் இணைப்பு வழங்கப்பட்டது.
பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இராட்சத விளம்பர பேனர் பொருத்தும் தூணை அகற்றிட வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் கேளம்பாக்கம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர்
S S k