ஒடிசாவிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி வந்த இருவர் கைது.! கஞ்சா பறிமுதல்.!
திண்டுக்கல்

திண்டுக்கல்லுக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது, 8 கிலோ கஞ்சா பறிமுதல்
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒடிசா மாநிலத்தில் இருந்து திண்டுக்கல் வழியாக திருநெல்வேலி செல்லும் புரளியா எக்ஸ்பிரஸ் ரயிலில் திண்டுக்கல்லை சேர்ந்த ஜோசப், வேடசந்தூரை சேர்ந்த ராஜேந்திரன் ஆகிய 2 பேர் கஞ்சாவுடன் வந்தனர்.
அவர்கள் போலீசாரை கண்டதும் கஞ்சா வைத்திருந்த பேக்கை செடிக்குள் போட்டுவிட்டு இருவரும் தப்ப முயன்றனர். அப்போது சந்தேகித்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பின்னர் விசாரணையில் ஒடிசா மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தி வந்ததும் போலீசாரை கண்டதும் அதை தூக்கி எறிந்ததாகவும் கூறினர்.
பின்னர் அவர்களிடமிருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் காவல் துறையினர்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )